அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் சந்தையில் ஒரு பொருளை விற்பனைக்கு வைத்திருந்தார். ஒரு முஸ்லிமை (ஏமாற்றி) அதில் சிக்கவைப்பதற்காக, அப்பொருளுக்குத் தனக்குத் தரப்படாத ஒரு விலையைக் குறிப்பிட்டு, அது தனக்குத் தரப்பட்டதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தார். அப்போது பின்வரும் இறைவசனம் அருளப்பெற்றது:
அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் சந்தையில் ஒரு வியாபாரப் பொருளை விற்பனைக்கு வைத்தார். ஒரு முஸ்லிமை (ஏமாற்றி) அதில் சிக்க வைப்பதற்காக, உண்மையில் தனக்குக் கொடுக்கப்படாத (ஒரு விலையை) அதற்குக் கொடுக்கப்பட்டதாக அதன் மீது சத்தியம் செய்தார். அப்போது, “இன்னல்லதீன யஷ்தரூன பிஅஹ்தில்லாஹி வஐமானிஹிம் ஸமனன் கலீலா...” (நிச்சயமாக! எவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பக் கிரயத்திற்கு விற்கிறார்களோ...) என்று அவ்வசனத்தின் இறுதி வரை (அல்-குர்ஆன் 3:77) அருளப்பட்டது.