இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4053ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما أَنَّ أَبَاهُ، اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا، وَتَرَكَ سِتَّ بَنَاتٍ، فَلَمَّا حَضَرَ جِذَاذُ النَّخْلِ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي قَدِ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ، وَتَرَكَ دَيْنًا كَثِيرًا، وَإِنِّي أُحِبُّ أَنْ يَرَاكَ الْغُرَمَاءُ‏.‏ فَقَالَ ‏"‏ اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَةٍ ‏"‏‏.‏ فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ، فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ كَأَنَّهُمْ أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ، فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ جَلَسَ عَلَيْهِ، ثُمَّ قَالَ ‏"‏ ادْعُ لَكَ أَصْحَابَكَ ‏"‏‏.‏ فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ عَنْ وَالِدِي أَمَانَتَهُ، وَأَنَا أَرْضَى أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَلاَ أَرْجِعَ إِلَى أَخَوَاتِي بِتَمْرَةٍ، فَسَلَّمَ اللَّهُ الْبَيَادِرَ كُلَّهَا وَحَتَّى إِنِّي أَنْظُرُ إِلَى الْبَيْدَرِ الَّذِي كَانَ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم كَأَنَّهَا لَمْ تَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உஹத் போர் நாளில் ஷஹீத் ஆக்கப்பட்டார்கள். அவர்கள் கடனையும், ஆறு பெண் மக்களையும் விட்டுச் சென்றார்கள். பேரீச்சம்பழம் பறிக்கும் காலம் வந்தபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "என் தந்தை உஹத் போர் நாளில் ஷஹீத் ஆக்கப்பட்டார்கள் என்பதும், அவர்கள் அதிக கடனை விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதும் தாங்கள் அறிவீர்கள். கடன் கொடுத்தவர்கள் உங்களைப் பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் சென்று ஒவ்வொரு ரகப் பேரீச்சம்பழத்தையும் தனித்தனிப் குவியலாகச் சேர்த்து வியும்" என்றார்கள். நான் அவ்வாறே செய்துவிட்டு அவர்களை அழைத்தேன். கடன் கொடுத்தவர்கள் அவர்களைப் பார்த்தபோது, அந்நேரம் என்மீது தூண்டிவிடப்பட்டவர்களைப் போன்று (கடுமையாக) நடந்துகொண்டார்கள். அவர்கள் செய்வதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, ஆகப்பெரிய குவியலை மூன்று முறை சுற்றிவந்து, அதன் மீது அமர்ந்துகொண்டார்கள். பிறகு, "உம்முடைய தோழர்களை (கடன் கொடுத்தவர்களை) என்னிடம் அழியும்" என்றார்கள்.

பிறகு என் தந்தையின் கடனை அல்லாஹ் நிறைவேற்றும் வரை, அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் அளந்து கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். என் தந்தையின் கடனை அல்லாஹ் நிறைவேற்றி வைத்துவிட்டு, என் சகோதரிகளிடம் நான் ஒரு பேரீச்சம்பழத்தைக் கூட கொண்டு செல்லாவிட்டாலும் நான் திருப்தியடைந்திருப்பேன். ஆனால், அல்லாஹ் எல்லாக் குவியல்களையும் (குறையாமல்) அப்படியே மீதப்படுத்தினான். நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த அந்தக் குவியலைப் பார்க்கும்போது அதிலிருந்து ஒரு பேரீச்சம்பழம் கூட குறையாதது போன்று இருந்தது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3636சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ شَيْبَانَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَاهُ، اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ سِتَّ بَنَاتٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا فَلَمَّا حَضَرَ جُدَادُ النَّخْلِ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ دَيْنًا كَثِيرًا وَإِنِيِّ أُحِبُّ أَنْ يَرَاكَ الْغُرَمَاءُ‏.‏ قَالَ ‏"‏ اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَةٍ ‏"‏‏.‏ فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ كَأَنَّمَا أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ جَلَسَ عَلَيْهِ ثُمَّ قَالَ ‏"‏ ادْعُ أَصْحَابَكَ ‏"‏‏.‏ فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ أَمَانَةَ وَالِدِي وَأَنَا رَاضٍ أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي لَمْ تَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அவர்களுடைய தந்தை உஹத் போரின் நாளில் ஷஹீத் ஆக்கப்பட்டார்கள். அவர் ஆறு மகள்களையும், தன் மீது ஒரு கடனையும் விட்டுச் சென்றார்கள்.

பேரீச்சம்பழ அறுவடைக்காலம் வந்தபோது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "என் தந்தை உஹத் நாளில் ஷஹீத் ஆக்கப்பட்டார்கள் என்பதும், அவர் பெரும் கடனை விட்டுச் சென்றார்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும். கடன் கொடுத்தவர்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினேன்.

அதற்கு அவர்கள், "சென்று, ஒவ்வொரு வகைப் பேரீச்சம்பழத்தையும் ஒரு ஓரத்தில் குவியலாகச் சேர்த்து வை" என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன்; பிறகு அவர்களை அழைத்தேன். அவர்கள் (கடன் கொடுத்தவர்கள்) நபியவர்களைப் பார்த்தபோது, அந்த நேரத்தில் அவர்கள் எனக்கு எதிராகத் தூண்டப்பட்டது போன்று (கடுமையாக) நடந்துகொண்டார்கள்.

அவர்கள் செய்வதை நபியவர்கள் கண்டபோது, பேரீச்சம்பழக் குவியல்களில் மிகப்பெரியதை மூன்று முறை சுற்றி வந்து, அதன் மீது அமர்ந்துகொண்டார்கள். பிறகு, "உன் தோழர்களை (கடன் கொடுத்தவர்களை) கூப்பிடு" என்றார்கள்.

அல்லாஹ் என் தந்தையின் கடனை நிறைவேற்றும் வரை, அவர்களுக்கு (பேரீச்சம்பழங்களை) அளந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். அல்லாஹ் என் தந்தையின் கடனை நிறைவேற்றியதில் நான் திருப்தியடைந்தேன்; (ஆனால் அற்புதமாக) ஒரு பேரீச்சம்பழம் கூட குறையவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)