இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

544ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا‏.‏ وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ مِنْ قَعْرِ حُجْرَتِهَا‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் என் அறையிலிருந்து வெளியேறியிருக்காத நிலையில் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.
அபூ உஸாமா (ரஹ்) அவர்கள் ஹிஷாம் (ரஹ்) வழியாக அறிவிக்கும்போது, "அறையின் ஆழத்திலிருந்து (வெளியேறியிருக்கவில்லை)" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح