அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(சுவனத்தில் உள்ள) கூடாரம் (என்பது) ஒரு முத்தாகும். வானத்தில் அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கையாளருக்கு ஒரு குடும்பம் இருப்பார்கள். அவர்களை மற்றவர்கள் (அதாவது, அந்தக் கூடாரத்திற்கு வெளியே உள்ளவர்கள்) பார்க்க முடியாது."