حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا أَوْ سَبْعُمِائَةِ أَلْفٍ ـ شَكَّ فِي أَحَدِهِمَا ـ مُتَمَاسِكِينَ، آخِذٌ بَعْضُهُمْ بِبَعْضٍ، حَتَّى يَدْخُلَ أَوَّلُهُمْ وَآخِرُهُمُ الْجَنَّةَ، وَوُجُوهُهُمْ عَلَى ضَوْءِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ .
ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக என் உம்மத்தினரில் எழுபதாயிரம் பேர் அல்லது ஏழு இலட்சம் பேர் - (இந்த இரண்டில் ஒன்றின் மீது அறிவிப்பாளருக்குச் சந்தேகமுள்ளது) - சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் (சொர்க்கத்தில்) நுழையும் வரை, அவர்கள் ஒருவரையொருவர் பற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று இருக்கும்."
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَيَدْخُلَنَّ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَوْ سَبْعُمِائَةِ أَلْفٍ ـ لاَ يَدْرِي أَبُو حَازِمٍ أَيُّهُمَا قَالَ ـ مُتَمَاسِكُونَ، آخِذٌ بَعْضُهُمْ بَعْضًا، لاَ يَدْخُلُ أَوَّلُهُمْ حَتَّى يَدْخُلَ آخِرُهُمْ، وُجُوهُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ .
ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் உம்மத்தினரில் எழுபது ஆயிரம் அல்லது ஏழு லட்சம் பேர் சொர்க்கத்தில் நுழைவார்கள். – (இவ்விரண்டில் எதை அவர்கள் கூறினார்கள் என்பதை அபூ ஹாஸிம் அறியமாட்டார்.) – அவர்கள் (இறுகப்) பிணைந்திருப்பார்கள்; அவர்களில் ஒருவர் மற்றவரைப் பற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையும் வரை அவர்களில் முதலாமவர் நுழையமாட்டார். அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று இருக்கும்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எனது சமுதாயத்திலிருந்து எழுபதாயிரம் நபர்கள் அல்லது ஏழு லட்சம் நபர்கள் - (சரியான எண்ணிக்கை அறிவிப்பாளர் அபூஹாஸிம் அவர்களுக்கு நினைவில்லை) - ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையும் வரை அவர்களில் முதலானவர் நுழையமாட்டார். அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று (பிரகாசமாக) இருக்கும்.”