முஹம்மத் (இப்னு சீரீன்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமா அல்லது பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமா என்பது குறித்து (மக்கள்) பெருமையடித்துக் கொண்டார்களா அல்லது விவாதித்துக் கொண்டார்களா? (என்று அறிவிப்பாளர் ஐயுற்றார்). அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், "அபுல் காசிம் (நபி (ஸல்)) அவர்கள் (பின்வருமாறு) கூறியுள்ளார்கள் அல்லவா?" என்று கேட்டார்கள்:
"சொர்க்கத்தில் நுழையும் முதல் கூட்டத்தினர் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்ற தோற்றத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் வானில் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று இருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு மனைவிகள் இருப்பார்கள். அவ்விருவரின் கெண்டைக்கால்களின் மஜ்ஜை சதைக்கு அப்பாலிருந்தும் வெளியே தெரியும். மேலும் சொர்க்கத்தில் துணைவி இல்லாதவர் எவரும் இருக்கமாட்டார்."