இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உமர் (பின் அல்-கத்தாப்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (அதிகா பின்த் ஸைத் என அறியப்பட்டவர்) ஃபஜ்ர் மற்றும் இஷா தொழுகையை பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவராக இருந்தார். (ஒருமுறை) அவரிடம், "உமர் (ரழி) அவர்கள் அதை வெறுப்பதையும், அவருக்கு அதிக ரோஷம் இருப்பதையும் நீங்கள் அறிந்திருந்தும், ஏன் (பள்ளிவாசலுக்கு) வெளியே செல்கிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "என்னைத் தடுப்பதிலிருந்து அவரை எது தடுக்கிறது?" என்று கேட்டார். (அதற்கு கேள்வி கேட்டவர் அல்லது இப்னு உமர் (ரழி) அவர்கள்) " 'அல்லாஹ்வின் பெண் அடிமைகளை அல்லாஹ்வின் பள்ளிவாசல்களுக்குச் செல்வதிலிருந்து தடுக்காதீர்கள்' என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று அவரைத் தடுக்கிறது" என்று கூறினார்.