அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் பொய்யை அது தவறானது என்பதற்காக கைவிடுகிறாரோ, அவருக்காக சுவர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீடு கட்டப்படும். யார் தன்பக்கம் நியாயம் இருந்தும் வாக்குவாதத்தைக் கைவிடுகிறாரோ, அவருக்காக அதன் மத்தியில் ஒரு வீடு கட்டப்படும். மேலும், யார் தனது குணத்தை அழகுபடுத்திக் கொள்கிறாரோ, அவருக்காக அதன் உச்சியில் ஒரு வீடு கட்டப்படும்."