இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2664ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ
رَبِيعَةَ بْنِ عُثْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ
وَفِي كُلٍّ خَيْرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ وَاسْتَعِنْ بِاللَّهِ وَلاَ تَعْجِزْ وَإِنْ أَصَابَكَ شَىْءٌ فَلاَ تَقُلْ
لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا ‏.‏ وَلَكِنْ قُلْ قَدَرُ اللَّهِ وَمَا شَاءَ فَعَلَ فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ
‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பலவீனமான இறைநம்பிக்கையாளரைவிட, பலமான இறைநம்பிக்கையாளர் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். ஆயினும், (இறைநம்பிக்கையாளர்கள்) அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆர்வத்துடன் நாடு. அல்லாஹ்விடம் உதவி தேடு; சோர்வடைந்து விடாதே! உனக்கு ஏதேனும் (துன்பம்) ஏற்பட்டால், 'நான் (அப்படிச்) செய்திருந்தால், (விளைவு) இப்படி இப்படியெல்லாம் இருந்திருக்குமே!' என்று கூறாதே. மாறாக,

**'கத்(த)ருல்லாஹி வமா ஷாஅ ஃபஅல'**

(இது அல்லாஹ்வின் விதி; அவன் நாடியதைச் செய்தான்)

என்று கூறு. ஏனெனில், 'லவ்' (நான் அப்படிச் செய்திருந்தால்...) என்று கூறுவது ஷைத்தானின் செயலுக்கே வழிவகுக்கும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح