அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (மக்களை) நேர்வழிக்கு அழைக்கின்றாரோ, அவருக்கு, அதனைப் பின்பற்றியவர்களின் நற்கூலிகளைப் போன்ற நற்கூலி உண்டு; (அவ்வாறு பின்பற்றிய) அவர்களின் நற்கூலிகளில் எதுவும் எந்த விதத்திலும் குறைக்கப்படாது.
மேலும், யார் (மக்களை) வழிகேட்டிற்கு அழைக்கின்றாரோ, அவர் அதனைச் செய்தவர்களின் பாவங்களைப் போன்றே அதன் பாவ(ச் சுமை)யைச் சுமக்க வேண்டியிருக்கும்; (அவ்வாறு செய்த) அவர்களின் பாவங்களில் எதுவும் எந்த விதத்திலும் குறைக்கப்படாது.