இப்னு உமர் (ரழி) அவர்களின் மவ்லாவான யாஸார் கூறினார்: ஃபஜ்ர் உதயமானதற்குப் பிறகு நான் (நஃபிலான தொழுகை) தொழுதுகொண்டிருப்பதை இப்னு உமர் (ரழி) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் கூறினார்கள்: “யாஸாரே! நாங்கள் (ஃபஜ்ர் தொழுகைக்குப் பிந்தைய நஃபிலான) இந்தத் தொழுகையைத் தொழுதுகொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: ‘இங்கு வந்திருப்பவர்கள் வராதவர்களுக்குத் தெரிவிக்கட்டும்; ஃபஜ்ர் (உதயமானதற்குப்) பிறகு இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு எந்தத் தொழுகையையும் தொழ வேண்டாம்’.”