وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَ عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ لَمْ تُطْعِمْهَا وَلَمْ تَسْقِهَا وَلَمْ تَتْرُكْهَا
تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் ஒரு பூனை காரணமாக தண்டிக்கப்பட்டாள். அவள் அதற்கு (பூனைக்கு) உணவோ தண்ணீரோ கொடுக்கவும் இல்லை; அது பூமியின் புழு பூச்சிகளைத் தின்பதற்காக அதை சுதந்திரமாக விடவும் இல்லை.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பெண் ஒரு பூனையின் காரணமாக வேதனை செய்யப்பட்டாள். அவள் அதைத் கட்டி வைத்திருந்தாள். அவள் அதற்கு உணவளிக்கவுமில்லை; தண்ணீர் புகட்டவுமில்லை. பூமியின் புழு பூச்சிகளைத் தின்பதற்காக அதை அவிழ்த்து விடவுமில்லை.”
قَالَ الزُّهْرِيُّ وَحَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ : دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا فَلاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ هِيَ أَرْسَلَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ حَتَّى مَاتَتْ . قَالَ الزُّهْرِيُّ : لِئَلاَّ يَتَّكِلَ رَجُلٌ وَلاَ يَيْأَسَ رَجُلٌ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பூனையை கட்டி வைத்து, அதற்கு உணவளிக்காமலும், பூமியில் உள்ள புழு பூச்சிகளைத் தின்பதற்காக அதை அவிழ்த்து விடாமலும், அது சாகும் வரை வைத்திருந்த காரணத்தால் ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள்.”