சல்மான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவரிடம், “உங்கள் நபி (ஸல்) உங்களுக்கு எல்லாவற்றையும், மலம் கழிக்கும் முறை (மற்றும் அதன் ஒழுக்கங்கள்) பற்றிக்கூடக் கற்றுத் தந்துள்ளார்கள்” என்று கூறப்பட்டது. அதற்கு அவர், “ஆம்! மலம் அல்லது சிறுநீர் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்குவதையும், வலது கையால் (உடல்) சுத்தம் செய்வதையும், மூன்றுக்கும் குறைவான கற்களைக் கொண்டோ, அல்லது சாணம் அல்லது எலும்பைக் கொண்டோ (உடல்) சுத்தம் செய்வதையும் அவர்கள் எங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று பதிலளித்தார்.
சல்மான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர் அவர்களிடம், "உங்கள் தோழர் (நபி (ஸல்) அவர்கள்) உங்களுக்கு மலம் கழிக்கும் முறையைக்கூட கற்றுத் தருகிறாரா!" என்று கூறினார். அதற்கு சல்மான் (ரழி) அவர்கள், "ஆம், மலம் அல்லது சிறுநீர் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்குவதையும், நமது வலது கைகளால் சுத்தம் செய்வதையும், அல்லது மூன்றுக்கும் குறைவான கற்களைக் கொண்டு (சுத்தம் செய்வதில்) போதுமாக்கிக்கொள்வதையும் அவர் (நபி (ஸல்) அவர்கள்) எங்களுக்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள்.