அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒருமுறை நான் எங்கள் வீட்டின் கூரை மீது ஏறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை (ஜெருசலேம்) முன்னோக்கி இரண்டு செங்கற்கள் மீது அமர்ந்து இயற்கைக்கடனை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். (ஹதீஸ் எண் 147 ஐப் பார்க்கவும்).