حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُتْبَةَ بْنِ مُسْلِمٍ، مَوْلَى بَنِي تَيْمٍ عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، مَوْلَى بَنِي زُرَيْقٍ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لْيَطْرَحْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً وَفِي الآخَرِ دَاءً .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவரின் பாத்திரத்தில் ஒரு ஈ விழுந்துவிட்டால், அதை முழுவதுமாக (அப்பாத்திரத்தினுள்) அமிழ்த்திவிட்டுப் பிறகு அதை வெளியே எறிந்துவிடட்டும். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் (அதற்கான மாற்று மருந்தும்) அதாவது அந்த நோய்க்கான சிகிச்சையும் இருக்கிறது."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உங்களில் ஒருவருடைய பாத்திரத்தில் ஈ விழுந்தால், அவர் அதனை முழுவதுமாக மூழ்கடிக்கட்டும், ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது. அது நிவாரணம் உள்ள தனது இறக்கையை பாதுகாக்கிறது, எனவே அதனை முழுவதுமாக (அப்பாத்திரத்தில்) மூழ்கடிக்கட்டும்.
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ، عَنْ عُتْبَةَ بْنِ مُسْلِمٍ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِكُمْ فَلْيَغْمِسْهُ فِيهِ ثُمَّ لْيَطْرَحْهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً وَفِي الآخَرِ شِفَاءً .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“உங்கள் பானத்தில் ஈ விழுந்தால், அதை அதனுள் முழுவதுமாக அமிழ்த்திவிட்டு, பிறகு வெளியே எறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் ஒரு இறக்கையில் நோயும் மற்றைய இறக்கையில் நிவாரணமும் இருக்கிறது.”