حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، - رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ .
அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தொழுகையின் திறவுகோல் தூய்மையாகும். (உலகச் செயல்களை) ஹராமாக்குவது தக்பீர் ஆகும்; (அவற்றை) ஹலாலாக்குவது தஸ்லீம் ஆகும்.”
அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தொழுகையின் திறவுகோல் தூய்மையாகும் (அதாவது, உளூ அல்லது குளிப்பு). அதை (தொழுகையை) ஆரம்பிக்கும் தக்பீர் (தக்ஃபீரத்துல் இஹ்ராம்) (தொழுகைக்கு அப்பாற்பட்ட செயல்களை) தடை செய்கிறது. அதை (தொழுகையை) முடிக்கும் ஸலாம் (முன்பு தடை செய்யப்பட்ட செயல்களை) அனுமதிக்கிறது.'
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدٍ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ .
அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தொழுகையின் திறவுகோல் தூய்மையாகும். (உலகத் தொடர்புகளைத்) தடை செய்வது தக்பீர் ஆகும்; (அவற்றை) ஆகுமாக்குவது தஸ்லீம் (ஸலாம்) ஆகும்.'"