“அல்லாஹ்வின் பெயரைக் கூறாதவருக்கு உளூ இல்லை” என்ற நபி (ஸல்) அவர்களின் ஹதீஸிற்கு விளக்கமளிக்கையில் ரபிஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (இதன் விளக்கம் யாதெனில்) ஒருவர் உளூச் செய்கிறார் மற்றும் குளிக்கிறார்; ஆனால், தொழுகைக்காக உளூச் செய்வதையோ அல்லது பெருந்தொடக்கிற்கான (ஜனாபத்) குளியலையோ அவர் நாடவில்லை (என்பதேயாகும்).