ஆஸிம் இப்னு லகீத் இப்னு ஸபிரா அவர்கள் அறிவித்தார்கள்: அவருடைய தந்தை லகீத் இப்னு ஸபிரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான், 'அல்லாஹ்வின் தூதரே, உளூவைப் பற்றி எனக்குக் கூறுங்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (ஸல்) 'உளூவை அழகிய முறையில் செய்யுங்கள்,¹ நீங்கள் நோன்பாளியாக இருக்கும்போது தவிர, (மற்ற நேரங்களில்) மூக்கிற்குள் நீரை நன்கு செலுத்தி சுத்தம் செய்யுங்கள்' என்று கூறினார்கள்." ¹ எண் 141-ஐக் காண்க.