أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَلاَ أُخْبِرُكُمْ بِوُضُوءِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உளூவைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று (மக்களிடம்) கேட்டுவிட்டு, (தாமே) ஒவ்வொரு உறுப்பையும் ஒரு முறை கழுவி உளூச் செய்து காட்டினார்கள்.
முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சாபத்தை வரவழைக்கும் மூன்று விஷயங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்: நீர் ஆதாரங்கள் (அல்லது நீர் எடுக்கும் இடங்கள்) உள்ள இடங்களிலும், மக்கள் நடமாடும் பாதைகளிலும், மற்றும் (மக்கள் ஓய்வெடுக்கும்) நிழலிலும் மலஜலம் கழிப்பது.