அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் செவியுற்றேன்: உங்களில் ஒருவர் தனது தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தனது கையை மூன்று முறை கழுவும் வரை (நீர் நிரம்பிய) பாத்திரத்தினுள் நுழைக்க வேண்டாம். ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது அல்லது எங்கே சுற்றியது (எந்த அசுத்தமான இடங்களைத் தொட்டது) என்று உங்களில் எவருக்கும் தெரியாது.