அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
சிலர் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்திலிருந்து உளூச் செய்வதை அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள், "உளூவை முழுமையாகச் செய்யுங்கள்! ஏனெனில், அபுல் காஸிம் (ஸல்) அவர்கள், 'நரக நெருப்பினால் குதிங்கால்களுக்கு (அதாவது, உளூவில் சரியாகக் கழுவப்படாத பாதத்தின் பகுதிகளுக்கு) பெரும் கேடுதான் (அல்லது அழிவுதான்)!' என்று கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.