وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلاَئِيِّ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنِ الْمَسْحِ، عَلَى الْخُفَّيْنِ فَقَالَتْ عَلَيْكَ بِابْنِ أَبِي طَالِبٍ فَسَلْهُ فَإِنَّهُ كَانَ يُسَافِرُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَسَأَلْنَاهُ فَقَالَ جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ لِلْمُسَافِرِ وَيَوْمًا وَلَيْلَةً لِلْمُقِيمِ . قَالَ وَكَانَ سُفْيَانُ إِذَا ذَكَرَ عَمْرًا أَثْنَى عَلَيْهِ .
ஷுரைஹ் பின் ஹானி அவர்கள் கூறினார்கள்:
நான் 'ஆயிஷா (ரழி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது பற்றி கேட்பதற்காக வந்தேன். அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அபூ தாலிபின் மகன் ('அலி) (ரழி) அவர்களிடம் கேட்பது சிறந்தது, ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்கள். நாங்கள் ('அலி (ரழி)) அவர்களிடம் கேட்டோம், அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பயணிக்கு மூன்று பகல்களும் மூன்று இரவுகளும், உள்ளூரில் தங்கியிருப்பவருக்கு ஒரு பகலும் ஒரு இரவும் என்ற உச்சவரம்பை நிர்ணயித்தார்கள்.
"நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் குஃப்கள் மீது மஸ்ஹு செய்வது பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள், 'அலீ (ரழி) அவர்களிடம் செல்லுங்கள், ஏனெனில் அதுபற்றி என்னை விட அவர் அதிகம் அறிந்தவர்' என்றார்கள். எனவே நான் அலீ (ரழி) அவர்களிடம் சென்று (குஃப்கள் மீது) மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உள்ளூரில் வசிப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவும், பயணிக்கு மூன்று நாட்களும் (குஃப்கள் மீது) மஸ்ஹு செய்யுமாறு எங்களுக்குக் கூறுவார்கள்' என்று கூறினார்கள்."