இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

249சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَلِيٍّ، - رضى الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَنْ تَرَكَ مَوْضِعَ شَعْرَةٍ مِنْ جَنَابَةٍ لَمْ يَغْسِلْهَا فُعِلَ بِهِ كَذَا وَكَذَا مِنَ النَّارِ ‏ ‏ ‏.‏ قَالَ عَلِيٌّ فَمِنْ ثَمَّ عَادَيْتُ رَأْسِي فَمِنْ ثَمَّ عَادَيْتُ رَأْسِي ثَلاَثًا ‏.‏ وَكَانَ يَجِزُّ شَعْرَهُ ‏.‏
அலி இப்னு அபூதாலிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம்பத்திய உறவுக்குப் பின் குளிக்கக் கடமையான ஒருவர் ஒரு மயிரிழை அளவுள்ள இடத்தைக்கூட கழுவாமல் விட்டுவிட்டால், அதற்காக இன்னின்ன அளவு நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார். அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்: இந்தக் காரணத்தினால் நான் எனது தலையை (முடியை) ஒரு எதிரியாகக் கருதினேன், அதாவது நான் எனது தலைமுடியை மழித்து வந்தேன். அவர்கள் (தங்கள்) தலைமுடியை மழித்து வந்தார்கள். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக.

ஹதீஸ் தரம் : ளயீஃப் (அல்-அல்பானீ)
ضعيف (الألباني)