ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்: ஈமான் கொண்ட பெண்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ரு தொழுகையைத் தொழுதுவிட்டு, தங்களது போர்வைகளால் (உடலை முழுமையாக) போர்த்திக்கொண்டு திரும்பிச் செல்வது வழக்கம். (அதிகாலை இருட்டாக இருந்ததால்) எவரும் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنَّ النِّسَاءُ يُصَلِّينَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الصُّبْحَ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ فَيَرْجِعْنَ فَمَا يَعْرِفْهُنَّ أَحَدٌ مِنَ الْغَلَسِ .
பெண்கள் தங்கள் போர்வை ஆடைகளால் (உடலை) போர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சுப்ஹுத் தொழுவார்கள். பின்னர் அவர்கள் திரும்பிச் செல்வார்கள், (அதிகாலை) மங்கலான வெளிச்சத்தின் காரணமாக அவர்களை யாரும் அடையாளம் கண்டுகொள்ள மாட்டார்கள்.