அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மஃரிப் தொழுகை நடத்தினார்கள். பின்னர் பாதி இரவு கழியும் வரை அவர்கள் எங்களிடம் வெளியே வரவில்லை. பிறகு அவர்கள் வெளியே வந்து, அவர்களுக்கு (இஷா) தொழுகை நடத்தினார்கள். பின்னர் கூறினார்கள்: 'மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். ஆனால் நீங்கள் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை தொழுகையின் நிலையில்தான் இருக்கிறீர்கள். பலவீனமானவர்களின் பலவீனமும், நோயாளிகளின் நோயும் இல்லாதிருந்தால், இந்தத் தொழுகையை (இஷா தொழுகையை) நள்ளிரவு வரை தாமதப்படுத்துமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.'"