அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“ஒருவர் ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழும் தொழுகையானது, அவர் தனியாகத் தொழும் தொழுகையை விட இருபத்தேழு மடங்கு கூடுதலானதாகும்.”
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழும் தொழுகையானது, அவர் தமது வீட்டிலும் தமது கடைவீதியிலும் (தனியாகத்) தொழும் தொழுகையை விட இருபதுக்கும் மேற்பட்ட தகுதிகள் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், அவர்களில் ஒருவர் உளூச் செய்து, அந்த உளூவைச் செம்மையாகச் செய்துவிட்டு, பிறகு பள்ளிவாசலுக்கு வந்தால் - அவரைத் தொழுகையைத் தவிர வேறெதுவும் (அங்கு) தூண்டவில்லை; தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமும் அவருக்கில்லை என்றால் - அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் வரை அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவருக்கு ஒரு தகுதி உயர்த்தப்படாமலும், அவரை விட்டும் ஒரு பாவம் நீக்கப்படாமலும் இருப்பதில்லை.
அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்துவிட்டால், தொழுகை அவரைத் தடுத்து வைத்திருக்கும் நேரமெல்லாம் (அதாவது, தொழுகைக்காகக் காத்திருக்கும் நேரமெல்லாம்) அவர் தொழுகையிலேயே (இருப்பவராகக்) கருதப்படுவார். மேலும் உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்தில் அமர்ந்திருக்கும் காலமெல்லாம் - அவர் (அங்கு) யாருக்கும் தொந்தரவு தராமலும், உளூ முறியாமலும் இருக்கும் வரை - வானவர்கள் அவருக்காக அருள்புரிய வேண்டுகின்றனர் (அதாவது, அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றனர்):