அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“ஒருவர் ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழும் தொழுகையானது, அவர் தனியாகத் தொழும் தொழுகையை விட இருபத்தேழு மடங்கு கூடுதலானதாகும்.”
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கூட்டுத் தொழுகை, தனித்துத் தொழும் தொழுகையை விட இருபத்தைந்து தரங்கள் (நன்மையில்) சிறந்ததாகும்."