அல்-ஹகம் இப்னு மீனா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்: (அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) மற்றும் அபூ ஹுரைரா (ரழி) ஆகிய) அவர்கள் இருவரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் மிம்பர் பலகைகள் மீது (நின்று) பின்வருமாறு கூறியதை தாங்கள் கேட்டதாகக் கூறினார்கள்:
“மக்கள் ஜும்ஆத் தொழுகையைப் புறக்கணிப்பதை நிச்சயமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அல்லாஹ் அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிட்டு விடுவான். பின்னர் அவர்கள் பராமுகமானவர்களில் ஆகிவிடுவார்கள்.”
இப்னு அப்பாஸ் (ரழி) மற்றும் இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மிம்பரின் படிகட்டுகளில் (நின்றவாறு), 'மக்கள் ஜுமுஆக்களைக் கைவிடுவதை நிறுத்திக்கொள்ளட்டும்! இல்லையெனில், அல்லாஹ் அவர்களின் இதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவான்; பிறகு அவர்கள் கவனமற்றவர்களில் ஆகிவிடுவார்கள்' என்று கூறினார்கள்."