அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது, (சுத்ரா இல்லையெனில்) தமக்கு முன்னாள் எவரையும் கடந்து செல்ல அவர் அனுமதிக்கக் கூடாது. மேலும், முடிந்தவரை அவரை விலக்க முயல வேண்டும், ஆனால் அவர் செல்ல மறுத்தால், அவரை வலுக்கட்டாயமாக விலக்க வேண்டும், ஏனெனில் அவன் ஒரு ஷைத்தான் ஆவான்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது, தனக்கு முன்னாள் எவரையும் கடந்து செல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். அவர் (கடந்து செல்பவர்) மறுத்தால், அவரை பலவந்தமாகத் தடுக்கட்டும். ஏனெனில் அவருடன் ஷைத்தான் இருக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது, தனக்கு முன்னால் எவரையும் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம். அவர் (கடந்து செல்ல) வற்புறுத்தினால், அவருடன் அவர் சண்டையிடட்டும்."