அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தங்களது தோழர்கள் (ரழி) மத்தியில் பின்னுக்குச் செல்லும் (ஒரு போக்கினைக்) கண்டார்கள். எனவே, அவர்களிடம் கூறினார்கள்: முன்னால் வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள், உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் உங்களைப் பின்பற்றட்டும். மக்கள் தொடர்ந்தும் பின் தங்கியே இருப்பார்கள், அல்லாஹ் அவர்களைப் பின்னுக்குத் தள்ளும் வரை.
அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் தோழர்கள் (தொழுகையில்) பின் வரிசைகளில் நிற்க முற்படுவதைக் கண்டார்கள். எனவே, அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
"முன்னால் வந்து என்னைப் பின்பற்றுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றட்டும். மக்கள் இவ்வாறு பின்தங்கிக் கொண்டே இருந்தால், சர்வவல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அவர்களைப் பின்தள்ளி விடுவான்."