அபுத் தர்தா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
"யார் இரவில் எழுந்து கியாம் தொழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது படுக்கைக்குச் செல்கிறாரோ, பின்னர் காலை வரை உறக்கம் அவரை மிகைத்துவிடுகிறதோ, அவர் எதை எண்ணினாரோ அது அவருக்குப் பதிவு செய்யப்படும். மேலும், அவரது உறக்கமானது, வல்லமையும் உயர்வும் மிக்க அவரது இரட்சகனாகிய அல்லாஹ்வினால் அவருக்கு வழங்கப்பட்ட ஒரு தர்மமாகும்."