حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُدَفِّفَانِ وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ فَكَشَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ وَجْهِهِ فَقَالَ " دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ ". وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى. وَقَالَتْ عَائِشَةُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتُرُنِي، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، فَزَجَرَهُمْ عُمَرُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " دَعْهُمْ، أَمْنًا بَنِي أَرْفِدَةَ ". يَعْنِي مِنَ الأَمْنِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(துல்ஹஜ் மாதத்தின்) மினா நாட்களில் அபூபக்கர் (ரழி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது என்னிடம் இரண்டு சிறுமிகள் ‘தஃப்’ (சிறு பறை) அடித்துக் கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தங்கள் ஆடையால் போர்த்திக்கொண்டிருந்தார்கள். அபூபக்கர் (ரழி) அவர்கள் அச்சிறுமிகளை அதட்டினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தங்கள் முகத்திலிருந்து துணியை விலக்கி, "அபூபக்கரே! அவ்விரண்டு பேரையும் விட்டுவிடுங்கள்; ஏனெனில் இது பெருநாள் (ஈத்) நாட்களாகும்" என்று கூறினார்கள். அந்த நாட்கள் மினா நாட்களாக இருந்தன.
மேலும் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் என்னை (திரையிட்டு) மறைத்துக் கொண்டிருக்க, பள்ளிவாசலில் அபிசீனியர்கள் விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது உமர் (ரழி) அவர்கள் அவர்களை அதட்டினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், 'அவர்களை விட்டுவிடுங்கள். பனீ அர்பிதாவினரே! பாதுகாப்பாக (விளையாடுங்கள்)' என்று கூறினார்கள்."