ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனக்கும் எனக்கு முன்னிருந்த நபிமார்களுக்கும் உள்ள உவமையாவது, ஒரு வீட்டைக் கட்டிய ஒரு மனிதரைப் போன்றதாகும். அவர் அதை முழுமையாக்கி, அழகாகவும் அமைத்தார்; ஒரு செங்கல்லின் இடத்தைத் தவிர. ஆகவே, மக்கள் அதில் நுழைந்து அதைக் கண்டு வியந்து, 'இந்தச் செங்கல்லின் இடம் (மட்டும் ஏன் காலியாக உள்ளது)? (அது நிரப்பப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!)' என்று கூறலானார்கள்."