حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَمُوتُ لأَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ، تَمَسُّهُ النَّارُ، إِلاَّ تَحِلَّةَ الْقَسَمِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “எந்தவொரு முஸ்லிமும் தமது மூன்று பிள்ளைகளை இழந்திருக்கிறாரோ, அவரை நரக நெருப்பு தீண்டாது; அல்லாஹ்வின் சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக (சத்தியம் நிறைவேறும் அளவுக்கு) தவிர.”
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்களில் எவருக்கேனும் மூன்று குழந்தைகள் இறந்துவிட, அவர் அதனை அல்லாஹ்வின் நாட்டமென ஏற்றுப் பொறுமை கொண்டால், சத்தியத்தை நிறைவேற்றுவதற்காகவே தவிர நரகம் அவரைத் தீண்டாது.
இந்த ஹதீஸை ஸுஹ்ரீ அவர்கள், மாலிக் அவர்களின் வாயிலாக அறிவித்தார்கள். மேலும், சுஃப்யான் அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்ட ஹதீஸில் (இந்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன):
அவர் சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக மாத்திரமே நரகத்தில் நுழைந்திருப்பார்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَمُوتُ لأَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ ثَلاَثَةٌ مِنَ الْوَلَدِ فَتَمَسَّهُ النَّارُ إِلاَّ تَحِلَّةَ الْقَسَمِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று குழந்தைகள் இறந்துவிட்ட எந்த முஸ்லிமையும், (இறைவனின்) சத்தியத்தை நிறைவேற்றுவதற்காகவே தவிர, நரக நெருப்பு தீண்டாது."