ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் சுப்ஹு (ஃபஜ்ர்) தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, அல்லாஹ் தனது பாதுகாப்புத் தொடர்பாக உங்களிடம் எதையும் கோராதவாறு (அதாவது, சுப்ஹு தொழுதவரைத் துன்புறுத்தி, அல்லாஹ்வின் பாதுகாப்பை மீறியதற்காக உங்களிடம் கேள்வி கேட்காதவாறு) இருந்து கொள்ளுங்கள். ஏனெனில், (அவ்வாறு மீறி, உங்களிடம்) அவன் (கேள்வி) கோரினால், உங்களைப் பிடித்து, பின்னர் உங்களை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்.
"யார் சுப்ஹு (ஃபஜ்ர்) தொழுகையைத் தொழுகிறாரோ, அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, அல்லாஹ் தனது பாதுகாப்பிலுள்ள உரிமையை (மீறியதற்காக) உங்களிடம் எதையும் கோரும் நிலையை நீங்கள் ஏற்படுத்திவிட வேண்டாம் (அதாவது, சுப்ஹுத் தொழுதவருக்கு எவ்விதத் தீங்கும் இழைத்துவிட வேண்டாம்). ஏனெனில், தனது பாதுகாப்பிலுள்ள உரிமையை (மீறியதற்காக) எவரையேனும் அவன் தேடினால், அவரை அவன் (தப்பவிடாமல்) பிடித்துவிடுவான்; பின்னர் அவரை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்."