இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வின் பெயரால் (உங்களிடம்) அடைக்கலம் தேடுகிறாரோ, அவருக்கு அடைக்கலம் கொடுங்கள். யார் அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறாரோ, அவருக்குக் கொடுங்கள். யார் அல்லாஹ்வின் பெயரால் (உங்களிடம்) பாதுகாப்புத் தேடுகிறாரோ, அவருக்குப் பாதுகாப்பு அளியுங்கள். யார் உங்களுக்கு ஒரு நன்மையைச் செய்கிறாரோ, அவருக்குப் பிரதியுபகாரம் செய்யுங்கள். (பிரதியுபகாரம் செய்வதற்குரிய) எதையும் நீங்கள் பெற்றிருக்காவிட்டால், அவருக்குப் பிரதியுபகாரம் செய்துவிட்டதாக நீங்கள் அறியும் வரை அவருக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.'