இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1404ஸஹீஹுல் புகாரி
وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ، قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ أَعْرَابِيٌّ أَخْبِرْنِي قَوْلَ اللَّهِ، ‏{‏وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ‏}‏ قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ مَنْ كَنَزَهَا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا فَوَيْلٌ لَهُ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلأَمْوَالِ‏.‏
காலித் பின் அஸ்லம் அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். அப்போது ஒரு கிராமவாசி, "{வல்லதீன யக்னிஸூனத் தஹப வல் ஃபிழ்ழத வலா யுன்ஃபிகூனஹா ஃபீ ஸபீலில்லாஹ்} (யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ...)" எனும் அல்லாஹ்வின் கூற்றைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டார்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "யார் அவற்றைச் சேமித்து வைத்து, அவற்றிற்குரிய ஜகாத்தை நிறைவேற்றவில்லையோ அவருக்குக் கேடுதான். இது ஜகாத் (சட்டம்) அருளப்படுவதற்கு முன்னால் (இருந்த நிலை) ஆகும். எப்போது அது அருளப்பட்டதோ, அப்போது அல்லாஹ் அதனை செல்வங்களைத் தூய்மைப்படுத்தக்கூடியதாக ஆக்கிவிட்டான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح