இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1031ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى، وَابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَىْءٍ مِنْ دُعَائِهِ إِلاَّ فِي الاِسْتِسْقَاءِ، وَإِنَّهُ يَرْفَعُ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஸ்திஸ்காவுடைய துஆவைத் தவிர வேறு எந்த துஆவுக்காகவும் தம் கைகளை உயர்த்தவே மாட்டார்கள். (இஸ்திஸ்காவுடைய துஆவில் மட்டும்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
895 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَعَبْدُ الأَعْلَى، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَىْءٍ مِنْ دُعَائِهِ إِلاَّ فِي الاِسْتِسْقَاءِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ ‏.‏ غَيْرَ أَنَّ عَبْدَ الأَعْلَى قَالَ يُرَى بَيَاضُ إِبْطِهِ أَوْ بَيَاضُ إِبْطَيْهِ ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழைக்காகப் பிரார்த்திக்கும்போது தவிர, வேறெந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை (இந்த அளவுக்கு) உயர்த்துபவர்களாக இருக்கவில்லை; (மழைக்காகப் பிரார்த்திக்கும்போது) தம் அக்குள்களின் வெண்மை தெரியுமளவுக்கு (அவர்கள் கைகளை) உயர்த்துவார்கள். எனினும் (அறிவிப்பாளர்) அப்துல் அஃலா அவர்கள், "அவரது அக்குளின் வெண்மை தெரியும் என்றோ அல்லது அக்குள்களின் வெண்மை (தெரியும்) என்றோ" கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1170சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَىْءٍ مِنَ الدُّعَاءِ إِلاَّ فِي الاِسْتِسْقَاءِ فَإِنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் மழைக்காகப் பிரார்த்தனை செய்யும் (இஸ்திஸ்கா) போது தவிர, வேறு எந்தப் பிரார்த்தனையிலும் தங்கள் கைகளை உயர்த்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அப்போது அவர்கள் தங்கள் கைகளை, அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரியும் அளவுக்கு உயர்த்துவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)
1180சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَىْءٍ مِنْ دُعَائِهِ إِلاَّ عِنْدَ الاِسْتِسْقَاءِ فَإِنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், மழை வேண்டிப் பிரார்த்திக்கும் (இஸ்திஸ்கா) போது தவிர, தங்களின் வேறு எந்தப் பிரார்த்தனையிலும் (பொதுவாக) கைகளை உயர்த்தியதில்லை. அப்போது அவர்களின் அக்குள்களின் வெண்மை தென்படும் அளவிற்கு கைகளை உயர்த்துவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)