இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஏதோ ஒன்றைப் பற்றிப் பேசினார், அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இன்னல்-ஹம்த லில்லாஹி நஹ்மதுஹு வ நஸ்தஈனுஹு, மன் யஹ்திஹி ல்லாஹு ஃபலா முதில்ல லஹு, வ மன் யுத்லில் ல்லாஹு ஃபலா ஹாதிய லஹு, வ அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு (வஹ்தஹு லாஷரீக லஹு) வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு. அம்மா பஃது (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது, நாம் அவனிடம் உதவி தேடுகிறோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ, அவரை எவரும் வழிதவறச் செய்ய முடியாது, மேலும் அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவருக்கு எவரும் நேர்வழி காட்ட முடியாது. வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் (அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை). மேலும், முஹம்மது அவர்கள் அவனுடைய அடிமையும் தூதருமாவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். இதற்குப் பிறகு)."