حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى تُزْهِيَ، قَالَ حَتَّى تَحْمَارَّ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பழங்கள் பழுக்கும் வரை அவற்றை விற்பதைத் தடை செய்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அதாவது அவை சிவப்பாக மாறுவதாகும்" என்றும் கூறினார்கள்.