ராஃபிஉ பின் கதீஜ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அன்சாரிகளிலேயே அதிக வயல்கள் உடையவர்களாக நாங்கள் இருந்தோம். நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது வழக்கம். சில வேளைகளில் (நிலத்தின்) இப்பகுதி விளைச்சலைத் தரும்; அப்பகுதி விளைச்சலைத் தராது. எனவே, அவ்வாறு (நிலத்தின் குறிப்பிட்ட பகுதியின் விளைச்சலை குத்தகைக்குக் கொடுப்பதிலிருந்து) செய்வதிலிருந்து நாங்கள் தடுக்கப்பட்டோம். ஆனால், வெள்ளி (நாணயத்தி)ற்காகக் குத்தகைக்கு விட நாங்கள் தடுக்கப்படவில்லை.
"நாங்கள் அன்சாரிகளிலேயே அதிகமான விவசாய நிலங்களைக் கொண்டவர்களாக இருந்தோம். '(நிலத்தின்) இப்பகுதி (விளைச்சல்) எங்களுக்கும், அப்பகுதி அவர்களுக்கும்' (என்று விளைச்சலைத் தனித்தனியாகப் பிரிக்கும்) நிபந்தனையின் பேரில் நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். சில நேரங்களில் இப்பகுதி விளைச்சலைத் தரும்; அப்பகுதி (எதையும்) விளைவிக்காது. எனவே, அவ்வாறு செய்வதை விட்டும் (நபி (ஸல்) அவர்கள்) எங்களைத் தடுத்தார்கள். ஆனால், வெள்ளி (நாணயங்களைக் கொண்டு வாடகைக்கு விடுவதை) அவர்கள் தடுக்கவில்லை."