அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒருவர் மற்றொருவரிடமிருந்து ஒரு நிலத்தை வாங்கினார். வாங்கியவர் அந்த நிலத்தில் தங்கம் உள்ள ஒரு மண்பானையைக் கண்டார். வாங்கியவர் விற்றவரிடம், ‘உங்கள் தங்கத்தை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் நான் உங்களிடமிருந்து நிலத்தை மட்டுமே வாங்கினேன், தங்கத்தை வாங்கவில்லை’ என்று கூறினார்.
அதற்கு நிலத்தின் உரிமையாளர், ‘நான் உங்களுக்கு நிலத்தை அதிலுள்ளவற்றுடன் சேர்த்தே விற்றுவிட்டேன்’ என்று கூறினார்.
ஆகவே, அவர்கள் இருவரும் ஒருவரிடம் (தீர்ப்புக் கோரி) சென்றனர். அவர், ‘உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?’ என்று கேட்டார். அவர்களில் ஒருவர், ‘எனக்கு ஒரு சிறுவன் இருக்கிறான்’ என்று கூறினார். மற்றவர், ‘எனக்கு ஒரு சிறுமி இருக்கிறாள்’ என்று கூறினார்.
அதற்கு அந்த மனிதர், ‘அந்தச் சிறுவனுக்கு அந்தச் சிறுமியைத் திருமணம் செய்து வையுங்கள். அதிலிருந்து அவர்கள் இருவருக்காகவும் செலவழியுங்கள்; தர்மமும் செய்யுங்கள்’ என்று கூறினார்.”
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் மற்றொரு நபரிடமிருந்து ஒரு நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கியவர், (தாம் வாங்கிய) அந்த நிலத்தில் தங்கம் உள்ள ஒரு ஜாடியைக் கண்டார். நிலத்தை வாங்கியவர் (விற்றவரிடம்), 'உனது தங்கத்தை என்னிடமிருந்து எடுத்துக்கொள்! ஏனெனில், நான் உன்னிடமிருந்து நிலத்தை மட்டுமே வாங்கினேன்; தங்கத்தை வாங்கவில்லை' என்று கூறினார். அதற்கு நிலத்தை விற்றவர், 'நான் உனக்கு நிலத்தையும் அதில் இருந்ததையும் (அதாவது, நிலத்துடன் சேர்ந்திருந்த அனைத்தையும்) சேர்த்தே விற்றேன்' என்று கூறினார்.
எனவே, இருவரும் (தங்கள் பிரச்சனைக்குத்) தீர்ப்பு வேண்டி ஒரு நபரிடம் சென்றனர். அவர்கள் யாரிடம் தீர்ப்புக் கோரிச் சென்றார்களோ அவர், 'உங்கள் இருவருக்கும் குழந்தைகள் உள்ளனரா?' என்று கேட்டார். அவர்களில் ஒருவர், 'எனக்கு ஒரு பையன் இருக்கிறான்' என்றார். மற்றவர், 'எனக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள்' என்றார். அதற்கு அவர், 'அந்தப் பையனுக்கு அப்பெண்ணைத் திருமணம் செய்து வையுங்கள்; அதிலிருந்து உங்கள் இருவருக்காகவும் செலவு செய்யுங்கள்; தர்மமும் செய்யுங்கள்' என்று கூறினார்."