ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு திருடன் கொண்டுவரப்பட்டான். அன்னார் (அவனது கையை) வெட்டினார்கள். (அவனைக் கொண்டுவந்த) அவர்கள், "(நீதிமன்றத் தீர்ப்பு) இந்த அளவிற்குச் செல்லும் என்று நாங்கள் விரும்பவில்லை" என்று கூறினார்கள். அவர் (ஸல்) கூறினார்கள்: "ஃபாத்திமாவாக (என் மகளாக) இருந்தாலும் நான் அவளது கையை வெட்டியிருப்பேன்."