ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதனை நான் செவியுற்றேன்: "எவர் அல்லாஹ்வை (மறுமை நாளில்) சந்தித்தாரோ, அவனுக்கு எதனையும் இணை கற்பிக்காதவராக (தவ்ஹீதின் நிலையில் மரணித்தவராக), அவர் சொர்க்கத்தில் நுழைந்தார். மேலும், எவர் அவனை (அல்லாஹ்வை மறுமை நாளில்) சந்தித்தாரோ, அவனுக்கு இணை கற்பித்தவராக (ஷிர்க்கின் நிலையில் மரணித்தவராக), அவர் நரக நெருப்பில் நுழைந்தார்."