அபூ ரிம்தாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் என் மகனுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ‘இவர் யார்?’ என்று கேட்டார்கள். நான், ‘இவன் என் மகன் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்,’ என்று கூறினேன். அவர்கள், ‘அறிந்து கொள்! இவர் செய்யும் குற்றத்திற்கு நீர் பொறுப்பல்ல; நீர் செய்யும் குற்றத்திற்கு இவர் பொறுப்பல்ல’ என்று கூறினார்கள்.”