حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الْوَلاَءِ، وَعَنْ هِبَتِهِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஒருவரை) விடுதலை செய்வதன் மூலம் (முன்னாள் எஜமானருக்கு ஏற்படும்) வலாஃவுரிமையை விற்பதையோ அல்லது அன்பளிப்பாகக் கொடுப்பதையோ தடைசெய்தார்கள்.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الْوَلاَءِ وَعَنْ هِبَتِهِ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் வலாஃ (அடிமை விடுதலை செய்ததினால் ஏற்படும் வாரிசுரிமை) விற்பதையும் மற்றும் அதை அன்பளிப்பாகக் கொடுப்பதையும் தடை செய்தார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்-வலாஉ (அடிமையை விடுதலை செய்வதன் மூலம் ஏற்படும் உறவுரிமை) விற்பதற்கும் அல்லது அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் தடை விதித்தார்கள். (இமாம் முஸ்லிம் கூறினார்கள்: இந்த ஹதீஸ் தொடர்பாக அனைவரும் அப்துல்லாஹ் இப்னு தீனார் அவர்களைச் சார்ந்திருக்கிறார்கள்.)