حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُكْلَمُ أَحَدٌ فِي سَبِيلِ اللَّهِ ـ وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُكْلَمُ فِي سَبِيلِهِ ـ إِلاَّ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَاللَّوْنُ لَوْنُ الدَّمِ وَالرِّيحُ رِيحُ الْمِسْكِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் பாதையில் எவர் காயப்படுகிறாரோ....அல்லாஹ்வின் பாதையில் யார் காயப்படுகிறார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்....அவர் மறுமை நாளில் வரும்போது, அவருடைய காயம் இரத்தத்தின் நிறத்திலும், அதன் மணம் கஸ்தூரி மணமாகவும் இருக்கும்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் பாதையில் காயப்பட்ட எவரும் மறுமை நாளில் தனது காயத்திலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட வருவார். தனது காயத்திலிருந்து வெளியேறும் இரத்தம் நிறத்தில் இரத்தமாக இருக்கும், ஆனால் அதன் மணம் கஸ்தூரியின் மணமாக இருக்கும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் காயமடைந்தவர் -அல்லாஹ்வின் பாதையில் யார் காயமடைகிறார்கள் என்பதை அல்லாஹ்வே நன்கு அறிவான்- கியாமத் நாளில் தம் காயம் இரத்தம் சொட்டச் சொட்ட வருவார். (அதிலிருந்து வெளிப்படும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறமாக இருக்கும், (ஆனால்) அதன் மணம் கஸ்தூரியின் மணமாக இருக்கும்.