இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: இஹ்ராம் நிலையில் இருந்த ஒருவரை அவரது சவாரிப் பிராணி (ஒட்டகம்) கீழே தள்ளி அவரது கழுத்தை முறித்துவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அதன்பேரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அவரை இலந்தை (இலைகள்) கலந்த நீரால் குளிப்பாட்டுங்கள். மேலும், அவரது இரண்டு (இஹ்ராம்) ஆடைகளிலேயே கஃபனிடுங்கள். அவரது தலையையோ, முகத்தையோ மூடாதீர்கள். ஏனெனில், அவர் மறுமை நாளில் தல்பியா கூறியவராகவே எழுப்பப்படுவார்.'