حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُخَابَرَةِ .
ஜாபிர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகாபராவை (நிலத்தை குத்தகைக்கு விடுவது, அதில் விளையும் பயிரின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் விளையும் பயிரை குத்தகைதாரர் எடுத்துக்கொள்வது போன்ற ஒரு வகை ஒப்பந்தம்) தடை செய்ததாக அறிவித்தார்கள்.