இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4313ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي حَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ مُجَاهِدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ قَامَ يَوْمَ الْفَتْحِ فَقَالَ ‏"‏ إِنَّ اللَّهَ حَرَّمَ مَكَّةَ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ، فَهْىَ حَرَامٌ بِحَرَامِ اللَّهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، لَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَلاَ تَحِلُّ لأَحَدٍ بَعْدِي، وَلَمْ تَحْلِلْ لِي إِلاَّ سَاعَةً مِنَ الدَّهْرِ، لاَ يُنَفَّرُ صَيْدُهَا، وَلاَ يُعْضَدُ شَوْكُهَا، وَلاَ يُخْتَلَى خَلاَهَا وَلاَ تَحِلُّ لُقَطَتُهَا إِلاَّ لِمُنْشِدٍ ‏"‏‏.‏ فَقَالَ الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ إِلاَّ الإِذْخِرَ يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّهُ لاَ بُدَّ مِنْهُ لِلْقَيْنِ وَالْبُيُوتِ، فَسَكَتَ ثُمَّ قَالَ ‏"‏ إِلاَّ الإِذْخِرَ فَإِنَّهُ حَلاَلٌ ‏"‏‏.‏ وَعَنِ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي عَبْدُ الْكَرِيمِ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ بِمِثْلِ هَذَا أَوْ نَحْوِ هَذَا‏.‏ رَوَاهُ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் நாளில் எழுந்து நின்று கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் மக்காவை புனிதமாக்கினான். ஆகவே, மறுமை நாள் வரை அல்லாஹ்வின் புனிதத்தைக் கொண்டு அது புனிதமானதாகும்.

எனக்கு முன்னால் எவருக்கும் (அதில் போரிட) அனுமதிக்கப்படவில்லை; எனக்குப் பின்னாலும் எவருக்கும் அனுமதிக்கப்படாது; எனக்குக் கூட பகலின் ஒரு சிறிது நேரம் தவிர (அதில் போரிட) அது அனுமதிக்கப்படவில்லை.

அதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது; அதன் முட்செடிகள் வெட்டப்படக் கூடாது; அதன் புற்கள் கிள்ளப்படக் கூடாது; (தவறவிடப்பட்ட) அதன் பொருட்களை, அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறு யாரும் எடுக்கக் கூடாது."

அப்போது அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' (புல்லை) தவிரவா? ஏனெனில் அது கொல்லர்களுக்கும் வீடுகளுக்கும் அவசியமானதாயிற்றே?" என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு, பிறகு "'இத்கிர்' புல்லைத் தவிர; ஏனெனில் அது அனுமதிக்கப்பட்டதாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح